Tuesday, 6 March 2012

திடீரென ஆன்மீகத்துக்கு மாறிய சுருதி

,
 


கமல் மகளும், நடிகையுமான ஸ்ருதி நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். நெய்வேத்தியம் செய்தும் வழிபட்டார். கோவிலுக்குள் ஸ்ருதியை பார்த்ததும் ரசிகர்கள் முண்டியடித்தனர். கைகளை அசைத்து கூச்சலும் எழுப்பினார்கள். ஸ்ருதி அவர்களிடம் அமைதியாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். சாமி கும்பிடும் இடத்தில் ஆரவாரம் செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
வழிபாடு முடிந்து வெளியே வந்து காரில் ஏறச் சென்ற போதும் ரசிகர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் கோவிலில் அமைதியை கடைபிடிக்கும்படி கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் திருச்சானூரில் உள்ள பத்மாவதி சன்னதிக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்கிருந்து
காளகஸ்தி வந்து இறங்கிய ஸ்ருதியை கண்டதும் ரசிகர்கள் சுற்றி முற்றுகையிட்டார்கள். பக்தர்களும் முண்டியடித்து பார்த்தார்கள். அவர்களிடம் அமைதியாக இருக்கும் படி சைகையால் கேட்டுக் கொண்டு கோவிலுக்குள் சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து சாமியை வழிபட்டார். வழிபாடு முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Monday, 5 March 2012

முகத்தை மூடியபடி கமலுடன் மும்பையில் சுற்றிய கண்மணி (Photo in)

,

கண்மணி அன்போடு..காதலன் நான் கமல்ஹாசன் எழுதும் கடிதம்… லெட்டர் …சரி மடல்ன்னே வச்சிக்கயேன் …என்று ஒரு நடிகையுடன், அதுவும் அவரை முக்காடு போட்டுக்கொள்ளச்சொல்லி, கமல் மும்பை வீதிகளை வலம் வந்தது தான் இப்போது அங்கே ஹாட்டஸ்ட் செய்தி.

தனக்கு வயது அறுபதை நெருங்கிய வேளையில், இனிமேல் காதல் கிசுகிசுக்களில் அடிபடக்கூடாது. அப்படி மீறி அடிபட்டால் அது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று முடிவு செய்திருந்த கமல், சில காலமாகவே கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

ஆனால் சமீபத்தில் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பில் நெருங்கிப்பழக ஆரம்பித்த பிறகு அவரால், அப்படத்தின் இன்னொரு நாயகியான பூஜாகுமாரின் நெருக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

யெஸ் உங்கள் யூகம் சரிதான். மும்பையில் கமலுடன் முக்காடு போட்டுக்கொண்டு திரிந்தது சாட்சாத் இந்த பூஜா குமார் தான். நீங்கள் ரெகுலர் சினிமா ரசிகராக இருந்தால் இந்த பூஜா என்கிற இந்த பழைய கூஜாவை, ராஜாவின் சூப்பர் ஹிட் மெலைடிகளுல் ஒன்றான 'காதல் ரோஜாவே' என்ற பாடலை ஹம் செய்த படியே இவரை ஹண்டுபிடித்துவிட முடியும்.

இந்தக்காதல் ஜோடி, முதலில் மும்பை புகைப்படக்காரர் ஒருவர் கண்ணில் பட, அவர் கூட இருந்தது யார் என்று தெரியாததால்,கமலுடன் ரகஸியமாக அலையும் ஒரு பெண் என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டுவிட்டார். உடனே அவர்கள் இருவருக்குள் மட்டுமே எரிந்துகொண்டிருந்த தீ மும்பை முழுக்க பற்றிக்கொண்டது.

'இது என்னடா வம்பாப்போச்சி' என்று நொந்த கமல் உடனே தனது பி.ஆர்.ஓ. திகில் முருகனை அழைத்து, 'அது ஒரு பெண் என்று மட்டும் வரும்போது செய்தி மிக ஆபாசமானதாக காட்சி அளிக்கிறது. எனவே என் கூட சுற்றியது 'விஸ்வரூபம்' நாயகி பூஜாகுமார் தான் என்றும் நாங்கள் இருவரும் ஒரு ஃபோட்டோ ஷூட் சம்பந்தமாக மும்பை வந்தோம் என்றும் தெரிவித்து விடுங்கள் என்றாராம்.

சொல்லவே இல்ல…முந்தியெல்லாம் இப்பிடி சுத்துறதுக்குப் பேரு 'டிஸ்கஷன்'னு வச்சிருந்தாங்க. இப்ப ஃபோட்டோ ஷூட்டுன்னு மாத்தீட்டாங்களோ ? நல்லா ஷூட் பண்ணுங்க கமல் சார்.

Sunday, 4 March 2012

கேன்ஸ் பட விழாவில் ‘விஸ்வரூபம்’

,


'விஸ்வரூபம்' படத்தை கேன்ஸ் பட விழாவுக்கு அனுப்பும் விருப்பத்தில் இருக்கிறார் கமல். படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஓரிரு வாரத்தில் படத்தை முடித்துவிட்டு படவிழாவுக்கு அனுப்பும் வேலையை துவங்கவிருக்கிறார். கேன்ஸ் படவிழா போட்டி பிரிவில் இந்த படத்தை சேர்த்துவிடும் முடிவில் உள்ளார் கமல்.

விஷ்வரூபத்தில் இஷா செர்வானியும் இல்லை

,


கமலின் விஸ்வரூபம் படத்திலிருந்து நடிகை இஷா ஷெர்வானியும் விலகிவிட்டார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், இப்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.

கமல் இயக்கும் இந்தப் படத்தின் கதாநாயகிகள் விஷயத்தில் மட்டும் இழுபறியான நிலையே இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவை தேர்வு செய்தனர். கமலின் மனைவி கேரக்டரில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சோனாக்ஷி திடீரென விலகி விட்டார்.

அவருக்கு பதில் தீபிகா படுகோனே, சோனம்கபூர், வித்யாபாலன், சமீராரெட்டி, அனுஷ்கா என பலரை பரிசீலித்து இறுதியாக பூஜாகுமார் தேர்வானார். இந்த நிமிடம் வரை அவர்தான் ஹீரோயின்.

இரண்டாவது நாயகியாக இஷா ஷெர்வானி நடிக்கவிருந்தார். இந்த நிலையில் இஷா ஷெர்வானி திடீரென படத்தில் இருந்து விலகி விட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "விஸ்வரூபம்" படத்தில் கமலுடன் நடிக்க அவர் அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினர். கமலுடன் நடிக்க போவதை நினைத்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் அப்படத்தில் நடிக்க தேதி ஒத்து வரவில்லை. எனவே அதில் இருந்து விலகி விட்டேன்," என்றார்.

Friday, 2 March 2012

கமலுக்கு நோ சூர்யாவுக்கு ஒகே சொன்ன நடிகை

,

நடிகை இஷா ஷர்வானி இந்தியில் நடித்த படங்கள் சுமாராக ஓடின. அவரிடம் உள்ள ஏதோவொரு திறமையை பார்த்த கமல் தான் தயாரித்து இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் படமான விஸ்வரூபத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்.

இஷா ஷர்வானிக்கு கமல் கேட்ட கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால் விஸ்வரூபம் வாய்ப்பு கைநழுவி போய்விட்டது. இதை பற்றி கேட்ட போது இஷா " கமலின் விஸ்வரூபம் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு கால்ஷீட் தான் காரணம்.
இந்த வாய்ப்பு நழுவியது வருத்தமாக இருந்தாலும், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
இஷா விகரம் நடிக்கும் பாலிவுட் படமான டேவிட்டிலும் நடிப்பதாக பேச்சு. கமலின் விஸ்வரூபம் மார்ச் 15-ம் தேதி ரிலீஸாகிறது.

Thursday, 1 March 2012

’கமலின் விஸ்வரூபத்தை மிஸ் பண்ணினேன்’- இஷா ஷெர்வானி

,
 

மும்பையிலிருந்து கோடம்பாக்கத்தை நோக்கி மையம் கொள்ளக்கிளம்பும் புதிய புயலின் பெயர் இஷா ஷெர்வானி.நாட்டியத்தின் சகல அயிட்டங்களிலும் சக்கரவர்த்தினியான இஷா, கே.வி.ஆனந்த்-சூர்யா காம்பினேசனில் உருவாகும் 'மாற்றானில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.இப்படி ஒரு பாடலுக்கு ஆட இஷாவை ஒப்புக்கொள்ள வைக்க கே.வி.ஆனந்த் மும்பையில் மூன்று தினங்கள் முகாமிட்டிருந்தது தனிக்கதை.

அடுத்து பிஜாய் நம்பியார் இயக்கத்தில் மூன்று ஹீரோ சப்ஜெக்டான 'டேவிட்' இந்திப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் இஷா, படங்களில் நடிப்பதை விட, தனது புதுப்புது நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதில் தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்.

இதுபோன்று ஒரு நாட்டிய நாடகத்துக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதுதான், இஷாவை, கமல் தனது 'விஸ்வரூபம்' படத்துக்கு நாயகியாக நடிக்க அழைத்தாராம். ஆனால் நாட்டிய நிகழ்ச்சியை ஒரு பட வாய்ப்புக்காக எப்போதுமே தள்ளிப்போட விரும்பாத இஷா, கமல் படம் என்றும் பாராமல், 'ஸாரி அடுத்த படத்துல பார்க்கலாம்' என்று கமலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டாராம்.

Isha Sharvani opts out of Kamal's Viswaroopam

,
 

Isha Sharvani who was roped in to play a important role in Kamal Hasaan's magnum opus has opted out of the movie citing issues with her availability.The actress regrets opting out of her dream debut with Kamal Hasaan. It is said that the pretty actress was trying her level best to accomodate her dates with Kamal Hasaan'sViswaroopam , Surya's Maatran and Vikram's Bollywood venture David.But since the makers of the Viswaroopam were on a urge to complete the movie for the Cannes Festival the actress had no other go but to opt out of the movie.Kamal is now looking out for a suitable replacement for her role.It is worth mentioning here that the team had approached Katrina Kaif and Deepika Padukone for the role.

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates