Tuesday 22 November 2011

விஸ்வரூபம் பற்றி கமலின் முதல் பேட்டி

,
 
 
 
விஸ்வரூபம் படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பேட்டியும் கொடுத்ததில்லை கமல்ஹாஸன்.
 
முதல்முறையாக மும்பை பத்திரிகை ஒன்றுக்கு இப்போது பேட்டியளித்துள்ளார். விஸ்வரூபம் படத்தை சொந்தமாகத் தயாரிப்பது, படத்தின் கதை தழுவலா போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
 
அவர் கூறுகையில், "ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே எனது முழுக் கவனமும் இருக்கும். குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படாமல் என்னுடைய தேதிகள் வீணடிக்கப்பட்டால் அப்படம் என் பொறுப்பில் வந்துவிடும். விஸ்வரூபம் என் கைக்கு வந்த கதை இதுதான்.
 
என் நேரம் குறைவு என்பது புரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்த நாள் வரும்போதும், எனக்கான நேரம் குறைந்து கொண்டே போவதை உணர்ந்து பதைக்கிறது மனது. அரசுகளை தேர்வு செய்வது போல, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு வந்தால்கூட நன்றாகத்தான் இருக்கும்.
 
விஸ்வரூபம் எனது கதை
 
ஹான்னிபல் படத்தின் ரீமேக் தான் 'விஸ்வரூபம்' எனது சிலர் எழுதி வருகிறார்கள். அது உண்மையில்லை. 'விஸ்வரூபம்' எனது கதை.
 
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜோர்டன் ஆகிய நாடுகளில் நடைபெறுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. 'ஹே ராம்' படத்தினை அடுத்து 'விஸ்வரூபம்' படத்தினை இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறேன்.
 
நியூயார்க்கில் வசிக்கும் பூஜாகுமார்தான் ஹீரோயின்," என்று கூறியுள்ளார் கமல்.



0 comments to “விஸ்வரூபம் பற்றி கமலின் முதல் பேட்டி”

Post a Comment

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates