Wednesday 30 November 2011

Kamal Hasaan goes back to stage for FICCI

,
 

Kamal Hasaan was in town today(November 28th) to address the press gathering about FICCI's third Media and Businees Conclave that will be held on December 1st and 2nd .Speaking at the event , Kamal Hasaan said that he will perform a short stage show along with Ramesh Aravind that will be directed by ace director K.Balachander to showcase the importance of Digital Cinema and changing needs of media. The actor also urged both the central and state Government to come up with a regulatory body that would safe guard and solve copyright related issues that exists in Entertainment industry . After this press meet, Kamal Hasaan left to mumbai for some official reasons and will join the proceedings once he returns from mumbai.

Tuesday 29 November 2011

பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...

,
 
 
 
சென்னையில் நடக்கும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) விழாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடிக்கும் புதிய நாடகம் நடக்கிறது. இந்தத் தகவலை கமல்ஹாஸன் நேற்று தெரிவித்தார்.
 
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, நடிகர் கமல்ஹாசன் தலைமையில், சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.
 
இதுதொடர்பாக ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது.
 
இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.
 
மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.
 
கே பி இயக்கத்தில் நாடகம்
 
சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
 
பிரச்சினைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.
 
மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான் (கமல்ஹாசன்), கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.
 
தமிழக அரசிடம் நிதி கேட்போம்
 
சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப் பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது.
 
கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும். அவர்கள் தருகிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். கேட்பது எங்கள் கடமை,'' என்றார்.
 
பேட்டியின்போது, இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த லீனா ஜெய்சானி, பி.முராரி ஆகியோர் உடன் இருந்தார்கள். பத்திரிகைத் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்.



Sunday 27 November 2011

My favorite Kamal Films

,
 




Kamal kiss sruthi

,

Tuesday 22 November 2011

விஸ்வரூபம் பற்றி கமலின் முதல் பேட்டி

,
 
 
 
விஸ்வரூபம் படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பேட்டியும் கொடுத்ததில்லை கமல்ஹாஸன்.
 
முதல்முறையாக மும்பை பத்திரிகை ஒன்றுக்கு இப்போது பேட்டியளித்துள்ளார். விஸ்வரூபம் படத்தை சொந்தமாகத் தயாரிப்பது, படத்தின் கதை தழுவலா போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
 
அவர் கூறுகையில், "ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே எனது முழுக் கவனமும் இருக்கும். குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படாமல் என்னுடைய தேதிகள் வீணடிக்கப்பட்டால் அப்படம் என் பொறுப்பில் வந்துவிடும். விஸ்வரூபம் என் கைக்கு வந்த கதை இதுதான்.
 
என் நேரம் குறைவு என்பது புரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்த நாள் வரும்போதும், எனக்கான நேரம் குறைந்து கொண்டே போவதை உணர்ந்து பதைக்கிறது மனது. அரசுகளை தேர்வு செய்வது போல, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு வந்தால்கூட நன்றாகத்தான் இருக்கும்.
 
விஸ்வரூபம் எனது கதை
 
ஹான்னிபல் படத்தின் ரீமேக் தான் 'விஸ்வரூபம்' எனது சிலர் எழுதி வருகிறார்கள். அது உண்மையில்லை. 'விஸ்வரூபம்' எனது கதை.
 
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜோர்டன் ஆகிய நாடுகளில் நடைபெறுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. 'ஹே ராம்' படத்தினை அடுத்து 'விஸ்வரூபம்' படத்தினை இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறேன்.
 
நியூயார்க்கில் வசிக்கும் பூஜாகுமார்தான் ஹீரோயின்," என்று கூறியுள்ளார் கமல்.



Monday 21 November 2011

Kamal breaks his silence on Viswaroopam

,

Kamal Haasan has finally broken his silence over why he replaced Selvaraghavan as the director of Viswaroopam.

Speaking to a Mumbai tabloid, the actor made it clear that Selva had wasted his dates, and he was forced to become the director.

Kamal Haasan in the interview said: " Viswaroopam was my project and my story. But time was running out. Sonakshi's dates were gone. My dates were also running out. I do one project at a time. If the director doesn't respect my time, I will have to. I am very clear on this. If my dates are being wasted, the project becomes mine."

Says Kamal philosophically : "I've limited time, with me celebrating a birthday every year. I wish I could celebrate my birthday like the government does, once every five years."

Viswaroopam is a bi-lingual in Tamil and Hindi written, produced and directed by Kamal Haasan. The star cast consists of Kamal Haasan, Pooja Kumar, Isha Sherwani, Andrea, Jaideep Ahalawat, Samrat Chakrabarti and special appearance by Sekhar Kapoor. Music is composed by Shankar Ehasaan Loy.

Friday 18 November 2011

unbelievable paintings of Kamalhasan

,
 

beautiful kamala hasan paintings , kamal hasan paintings , kamal new paintings on his birthday photos , actor kamal drwing photos
 
 
 
 

Wednesday 16 November 2011

விஸ்வரூபம் தயாரிப்பாளர் திடீர் விலகல் செல்வராகவன் காரணமா?

,
 
 
 
விஸ்வரூபம் படத்தின் தயாரிப்புப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார் கமல்ஹாஸன்.
 
 
 
இந்தப் படத்தை ஆரம்பத்தில் இயக்குவதாக இருந்தவர் செல்வராகவன். எல்லாம் தயாராக இருந்த நிலையில் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் செல்வராகவன்.
 
 
 
இயக்குநர் பொறுப்பை கமல் ஹாஸன் ஏற்றார். இப்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
 
 
 
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் தானே ஏற்றுள்ளார் கமல்.
 
 
 
இந்தப் படத்தை முதலில் தயாரித்தது பிவிபி சினிமாஸ் பொட்லூரி பிரசாத். இவர் செல்வராகவனுக்கு நெருக்கமானவரும் கூட. இவரை விஸ்வரூபம் படத் தயாரிப்பாளராக்கியவரே செல்வராகவன்தான்.
 
அதனால் தயாரிப்பாளர் விலைகளின் பின்னணியில் செல்வராகவன் தலையீடு இருக்குமோ என்று பேசப்படுகிறது. எல்லாம் இன்னு கொஞ்ச நாளில் உண்மை தெரிந்து விடும்.
 
 
 
இப்போது பிரசாத்தும் விலகிக் கொள்ள, கமல்ஹாஸன் தயாரிப்பாளராகிவிட்டார்.



Tuesday 15 November 2011

கமல்.. மயில்சாமி..மண்சட்டி..மீன்குழம்பு!

,
 
 

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்றால் அவர் அழைப்பது நடிகர் மயில்சாமியைத் தான்.

கமல் ஹாசனுக்கு மீன் குழம்பு என்றால் இஷ்டம். எப்பொழுதெல்லாம் மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் முதலில் அழைப்பது நகைச்சுவை நடிகர் மயில்சாமியைத் தான். மயில்சாமி அவ்வளவு அருமையாகவா மீன் குழம்பு வைப்பார் என்று நினைக்க வேண்டாம்.

மயில்சாமியின் மனைவி கைப்பக்குவம் பிடித்திருப்பதால் தான் அவரை கமல் அழைப்பார். உடனே மயில்சாமி நல்ல மீனாக வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து மணக்க, மணக்க மீன் குழம்பு வைக்கச் சொல்வாராம்.

குக்கர், அவன் என்று வந்துவிட்ட காலத்திலும் மயில்சாமியின் மனைவி மண்சட்டியில் குழம்பு வைப்பதால் தான் அதில் அப்படி ஒரு ருசி இருக்கிறதாம். அதனால் தான் கமலுக்கு மயில்சாமி வீட்டு மீன் குழம்பு என்றால் நாக்கில் எச்சில் ஊறுகிறது. இந்த பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளதாம்.

மண்வாசனை மாறாத கமல்…!

Monday 14 November 2011

Kamal Launches Professor Gnanasambandam Books

,

Kamal and Vijay dance in Kamal's Birthday Party

,
   
 
 
Kamal and Vijay dance together in Kamal's Birthday Party



It's really rare news; Kamal who celebrated his birthday on this Nov 7th had a long time wish it seems. Ulaga Nayagan Kamal Hassan who is well known for his dance movements in the early 80's and 90's was obsessed with our Ilayathalapathy Vijay's dance style since a long time.



Kamal and Vijay dance in Kamal's Birthday Party

நான் ஒருவகையில் சுயநலவாதி: கமல்

,
 
 
 
நான் ஒரு வகையில் சுயநலவாதி என்று நடிகர் கமல்ஹாசன் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் தெரிவி்ததுள்ளார்.
 
பேராசிரியர் கு.ஞானசம்பந்தமின் 'இலக்கியச் சாரல்', 'ஜெயிக்கப்போவது நீதான்', 'மேடைப் பயணங்கள்', 'சந்தித்ததும் சிந்தித்ததும்', 'சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்' ஆகிய 5 நூல்கள் சென்னையில் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் புத்தகங்களை வெளியிட்டு பேசினார்.
 
அப்போது அவர் பேசியதாவது,
 
நான் ஒரு வகையில் சுயநலவாதி தான். எனக்கும் ஒரு சுயநலம் உண்டு. கற்றறிந்தவர்கள், ஞானம் உள்ளவர்களுடன் பேசிப் பழகி அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சுயநலம். நானும், ஞானசம்பந்தமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். அவரிடம் நான் பல அறிவுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
 
மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான் ஞானசம்பந்தம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதில் இருந்து நண்பர்களாகிவிட்ட நாங்கள் அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் பேசுவோம. சந்திக்க முடியவில்லையா தொலைபேசியிலாவது தொடர்பு கொண்டு பேசுவோம்.
 
நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து நாடக மேதை டி.கே.எஸ்.சண்முகத்திடம் பல முறை கேட்டிருக்கிறேன். அது தெரிந்தால் நீ பெரிய நடிகனாகிவிடுவாய் என்று கூறிய அவர் எனக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்துள்ளார்.
 
மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி கையை ஆட்டாமலேயே அனைவரையும் சிரிக்கை வைப்பார். நாகேஷோ தன் பாடி லாங்குவேஜால் அனைவரையும் சிரிக்க வைப்பார். இவ்வாறு ஆளுக்கொரு ஸ்டைல் உள்ளது.
 
ஞானசம்பந்தமுக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. அவர் ஒரு சிறந்த இலக்கியவாதி. அவருடைய நகைச்சுவை இயல்பாக இருக்கும். தான் அறிந்த விஷயங்களை, புலைமையை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இயல்பான நகைச்சுவையில் தெரிவித்துவிடுவார். இந்த புத்தகங்களிலும் அந்த எளிமை உள்ளது. அதனால் இவை நிச்சயம் மக்களைச் சென்றடையும்.
 
நான் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காததால் தான் நான் இன்னும் என்னை ஒரு மாணவனாகவே கருதி பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். பள்ளிப் படிப்பை முடித்திருந்தால் இந்த கற்கும் ஆர்வம் இருந்திருக்குமோ, இல்லையோ?
 
ஆத்திகம், நாத்திகம் பேசுவர்களிடம் நான் பேசியிருக்கிறேன். அவ்வாறு பேசும்போது எனக்குத் தேவையான விஷயங்களை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். நான் சினிமாவில் கடவுள் பக்தன், குள்ளன போன்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்வில் நடித்ததில்லை என்றார்.




My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates