Monday 5 March 2012

முகத்தை மூடியபடி கமலுடன் மும்பையில் சுற்றிய கண்மணி (Photo in)

,

கண்மணி அன்போடு..காதலன் நான் கமல்ஹாசன் எழுதும் கடிதம்… லெட்டர் …சரி மடல்ன்னே வச்சிக்கயேன் …என்று ஒரு நடிகையுடன், அதுவும் அவரை முக்காடு போட்டுக்கொள்ளச்சொல்லி, கமல் மும்பை வீதிகளை வலம் வந்தது தான் இப்போது அங்கே ஹாட்டஸ்ட் செய்தி.

தனக்கு வயது அறுபதை நெருங்கிய வேளையில், இனிமேல் காதல் கிசுகிசுக்களில் அடிபடக்கூடாது. அப்படி மீறி அடிபட்டால் அது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று முடிவு செய்திருந்த கமல், சில காலமாகவே கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

ஆனால் சமீபத்தில் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பில் நெருங்கிப்பழக ஆரம்பித்த பிறகு அவரால், அப்படத்தின் இன்னொரு நாயகியான பூஜாகுமாரின் நெருக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

யெஸ் உங்கள் யூகம் சரிதான். மும்பையில் கமலுடன் முக்காடு போட்டுக்கொண்டு திரிந்தது சாட்சாத் இந்த பூஜா குமார் தான். நீங்கள் ரெகுலர் சினிமா ரசிகராக இருந்தால் இந்த பூஜா என்கிற இந்த பழைய கூஜாவை, ராஜாவின் சூப்பர் ஹிட் மெலைடிகளுல் ஒன்றான 'காதல் ரோஜாவே' என்ற பாடலை ஹம் செய்த படியே இவரை ஹண்டுபிடித்துவிட முடியும்.

இந்தக்காதல் ஜோடி, முதலில் மும்பை புகைப்படக்காரர் ஒருவர் கண்ணில் பட, அவர் கூட இருந்தது யார் என்று தெரியாததால்,கமலுடன் ரகஸியமாக அலையும் ஒரு பெண் என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டுவிட்டார். உடனே அவர்கள் இருவருக்குள் மட்டுமே எரிந்துகொண்டிருந்த தீ மும்பை முழுக்க பற்றிக்கொண்டது.

'இது என்னடா வம்பாப்போச்சி' என்று நொந்த கமல் உடனே தனது பி.ஆர்.ஓ. திகில் முருகனை அழைத்து, 'அது ஒரு பெண் என்று மட்டும் வரும்போது செய்தி மிக ஆபாசமானதாக காட்சி அளிக்கிறது. எனவே என் கூட சுற்றியது 'விஸ்வரூபம்' நாயகி பூஜாகுமார் தான் என்றும் நாங்கள் இருவரும் ஒரு ஃபோட்டோ ஷூட் சம்பந்தமாக மும்பை வந்தோம் என்றும் தெரிவித்து விடுங்கள் என்றாராம்.

சொல்லவே இல்ல…முந்தியெல்லாம் இப்பிடி சுத்துறதுக்குப் பேரு 'டிஸ்கஷன்'னு வச்சிருந்தாங்க. இப்ப ஃபோட்டோ ஷூட்டுன்னு மாத்தீட்டாங்களோ ? நல்லா ஷூட் பண்ணுங்க கமல் சார்.

0 comments to “முகத்தை மூடியபடி கமலுடன் மும்பையில் சுற்றிய கண்மணி (Photo in)”

Post a Comment

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates