Sunday 1 April 2012

ரஜினி ரசிகர்கள் , கமல் ரசிகர்கள்- யார் புத்திசாலிகள்?

,
 
 
 
அட போங்கப்பா, ரசிகர்களாக இருப்பதே ஒரு முட்டாள்தனம், அதுல அந்த ரஜினி,கமல்-னு பெரிய வித்தியாசம் வேற அப்படினு நீங்க கடுப்பாகக்கூடும்.
 
உண்மையில் நம் மனதை உள்நோக்கி பார்த்தால் நாம் சந்தித்த மனிதர்களின், நம்மை ஈர்த்த மனிதர்களின் தாக்கம், ஆழ்மனதில் இருக்கக்கூடும். அதன் பாதிப்பாக நம் நடவடிக்கைகளில் ஒரு சில மேனரிஸங்களும் நம்மை அறியாமல் வெளிப்படக்கூடும். ஆழ்ந்து கவனித்தால் அது யாரோ ஒருவரிடமிருந்து நாம் ரசித்த விஷயமாக இருக்கும்.
 
புராணக்கதை கேட்ட காலங்களில் அதன் கதை மாந்தர்களை ரசித்தவர்கள் இப்போது சினிமா கதாநாயன்-களுள் மூழ்கி இருப்பதனை காலக்கொடுமை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமே தவிர யதார்த்தம் இதுதான்.
 
முன்பு புத்தக வாசிப்பு அதிகம் இருந்த காலத்தில், தன்னை வந்தியதேவனாகவும், அரவிந்தனாவும் வரிந்து கொண்டவர்கள், சினிமாவின் தாக்கம் அதிகரித்த பின் தன்னை சிவாஜியாகவும், எம்.ஜி.ஆராகவும் பாவித்துக்கொண்டார்கள்.இன்று ரஜினி, கமல் என்னும் பிம்பங்களை தாண்டி, அடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறார்கள்.
 
நான் யாருடைய ரசிகனும் இல்லை என்று காட்டிக்கொள்பவர்களின் மனதிலும் தான் ரசித்த யாரோ ஒருவரின் பிம்பம் ஒளிந்திருக்கும் என்பது தான் உண்மை.

தமிழ் சினிமாவில் எப்போதும் ஈர்ப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் தாக்கமும், நடிப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் ஏற்றமும் இருக்கும்.
 
எம்.ஜி.ஆர். ஈர்ப்பு வகை. சிவாஜி நடிப்பு வகை.
 
ரஜினியை பொறுத்தவரை ஈர்ப்பு அடிப்படையிலான ரசிகர்கள் தான் ஏராளம். அடித்தட்டு மக்கள், குழந்தைகள், பெண்கள் என்ற வகையில் ரஜினியின் கவர்ச்சி எடுபட்டிருப்பதை பார்க்கலாம். இப்போது இணையத்தில் அதிக அளவில் ரஜினி ரசிகர்கள் குவிந்திருப்பதற்கான காரணமும், முன்பு சிறுவர்களாக இருந்தவர்களை ரஜினி கவர்ந்தது தான்.
 
கமலை பொறுத்தவரை நடிப்பு மூலம் ரசிகர்களை ஈர்த்தது தான் அதிகம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் கமல் ரசிகர் என்ற அடையாளத்தையே கொண்டிருக்கிறார்கள்.
 
சினிமா சார்ந்த அத்தனை தொழில்நுட்ப விஷயங்களையும் கமல் தெரிந்து வைத்திருப்பது கூட இதற்கு காரணமாக இருக்கிறது. அனந்து முதல் வையாபுரி வரை அத்துணை சினிமா மனிதர்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்வதுடன், அவர்களையும் தன்னுடைய படங்களில் பயன்படுத்துவது கமலினை (மேல்தட்டு) ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.
 
சில பல காரணங்களால் சிவப்பாக இருக்கும் கமலை விட, ரஜினிக்கு அதிகமான பெண்களின் ஈர்ப்பை பெற்றியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம், கேமராவை பார்த்து பஞ்ச் பேசுவது இதெல்லாம் ரஜினிக்கே கைவந்த ரசிகர்களை ஈர்ப்பதற்க்கான வித்தை.
 
படம் வெளியாகும் சமயத்தில் எல்லாம் அரசியல் வருவதாக பேசுவது கூட,ரசிகர்களை தக்கவைக்க ரஜினி மேற்கொள்ளும் "சினிமா அரசியல்" தந்திரம் தான் என்பது இன்றும் உயிருடன் இருக்கும் குற்றச்சாட்டுதான்.
 
ஆனால் ரஜினி அளவு ரசிகர்களின் ஈர்ப்பை இனி ஒரு நடிகர் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே.இப்போது கூட ரஜினியின் ரோபோ படவியாபாரம் பார்த்து திகைத்து போய் கிடக்கிறது இந்திய திரையுலகம்.
 
ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் இயங்குபவர்கள் கூட, தங்களின் சொந்த பணத்தை போட்டுதான் கோலாகலம் செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
ரஜினி, கமல் தலைமுறையை தாண்டி வரும்போது, இனி வரும் காலங்களில் இந்த கூத்துக்களும் ஒரு முடிவினை அடையும் என்று நம்பலாம்.
 
இனி ரசிகர் மன்றங்கள் தீண்டதகாததாக மாறிவிடும் சூழ்நிலையும் விரைவில் வரும், அதற்கு ஈடாக இணைய ரசிகர் மன்றங்கள் உருவாகக்கூடும்.
 
ரசிகர் மன்றம் நடிகர்களுக்கு கூடாரம்;
குடும்பங்களுக்கு சேதாரம்.
டிஸ்கி:
இது ஒரு மீள்பதிவு.

டிரைலர் டைம்ஸ்:

எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கிய ஈர்ப்பியல் விதிகள் - விரைவில்...
 
 

அமீர் இயக்கத்தில் கமலஹாஸன்!

,
 
 
 
நடிகர் கமலஹாஸனை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன் எனக் கூறியிருக்கிறாராம் அமீர். தற்போது விஸ்வரூபம் படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் கமலஹாஸன் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருப்பதால் அடுத்ததாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக இருக்கிறார்.
 
 
இந்நிலையில் கமலஹாஸனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன் என்று அமீர் கூறியிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
அமீர் தற்போது ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ஆதிபகவன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படத்தில் சல்மான் கான், ஜாக்கி சான் ஆகியோர் நடிக்கிறார்கள் என வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லையாம்.
அப்டீன்னா அது பேரு புரளி தானே?

 


Monday 26 March 2012

Sridevi Kamal Hassan Sensational Hot Scene

,
 
 


Kamal left Sridevi waiting
Kamal met her sometime later
She said, I see your eyes are dead
What happened to you, lover?

What happened to you?
And since she spoke the truth to me
I tried to answer truthfully

Whatever happened to my eyes
Happened to your beauty
Happened to your beauty
What happened to your beauty
Happened to me


Gsv Pics |Gsv Vids | Techno zip| Divine Thought | For The Sake of Us | Gsv Films


Saturday 24 March 2012

Priyamani denies Kamaal movie

,
 

Priyamani was not seen in Kollywood for a year now, the actress is busy with movies with Tollywood . Priyamani was recently offered a role in Kamaal R Khan's Deshadrohi 2 . In a micro blogging Kamaal R Khan had offered Priyamani the role of Abu Salim's girl friend character Monica Bedi . But when we contacted the actress , she said that she has not seen the tweet from the Bollywood director but she clarified that she will not be a part of the movie since she has prior commitments to be taken care of now .The actress had done Bollywood movies like Ravaan and Raktha Charithira both the movies were made by ace directors Mani Ratnam and Ram Gopal Varma.

400கோடி பட்ஜெட்! ஜாக்கிசானுடன் கமலா? சூர்யாவா?

,

பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர் போனவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். கமல் நடித்த தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே தன்னைப் பற்றி நிரூபித்தவர் ரவிச்சந்திரன். ஜாக்கி சான் நடித்த பெரும்பாலான படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டதன் மூலம் ஜாக்கியின் நண்பரானவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இந்த நல்ல நட்பின் மூலமே தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கி சான் வந்தார்.

தற்போது ரவிச்சந்திரன் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்ப்து ஜாக்கி சான் நடித்த 'ஆர்மர் ஆப் காட் -ll' படத்தை தமிழில் எடுக்கும் முயற்சியில் தான். இந்த படத்தில் ஆர்மர் ஆப் காட் படத்தின் கதை இந்தியாவில் நடப்பது போல் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜாக்கிசான் ரசிகர்களோடு சேர்த்து மற்றவர்களையும் கவர்வதற்காக இந்தி மற்றும் தமிழ் ஹீரோக்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இந்தியில் சல்மான்கானிடம் பேசப்பட்டு வருகிறது. ஜாக்கிசானுடன் இணைந்து நடிப்பதால் பெரும்பாலும் சல்மான்கான் ஒப்புக்கொள்வார் என்றே சொல்கிறார்கள்.

தமிழ் ஹீரோக்களில் ரவிசந்திரனுக்கு கமலுடன் நல்ல நட்பு இருப்பதாலும், இந்த வருடம் ரவிச்சந்திரனுக்கு கமல் கால்ஷீட் கொடுப்பதாக கூறியிருப்பதாலும் கமல் தான் நடிப்பார் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்கார் தரப்பிலிருந்து சூர்யாவிடம் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சு நடப்பதாகவும் தெரிகிறது. படத்தின் பட்ஜெட் 400கோடி ரூபாய் தானாம்.

Thursday 22 March 2012

Kamal Hasaan ,Salman Khan ,Jackie Chan roped in for Aascar Films ?

,

Aascar Film productions which is known for mega budget ventures is yet again back with a magnum opus that is touted to be a sequel of Hollywood blockbuster Armour of God which had Jackie Chan in the lead. Aascar Films have approached Bollywood Super Star Salman Khan to play a major role in the movie , but the star is yet to decide . There are speculations that the movie will also feature few biggies from Kollywood industry the movie might feature Kamal or Rajini . However , insiders claim that Kamal Hasaan is the front runner for the role . it may be recalled that Kamal Hasaan shares great rapport with Jackie Chan ever since he flew down for Kamal Hasaan starrer Dasavatharam .

Wednesday 14 March 2012

ஆக்ரோஷ கமல் - ஆச்சர்யப்பட்ட லீ!

,
 
 
 
இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்க, கமல் இயக்கி வருகிறார். ஷங்கர்-இஷான்-லாய் இசையமைத்து வருகிறார்கள்.
 
'விஸ்வரூபம்' ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. இதுவரை கமல் நடித்த படங்கள் எல்லாவற்றையும் விட அதிக பொருட்செலவில் தயாராகும் படம் 'விஸ்வரூபம்'.
 
'விஸ்வரூபம்' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் LEE WHITTAKER. இவர் மைக்கேல் பே இயக்கிய 'PEARL HARBOUR' படத்திற்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தவர். அர்னால்ட், ஜார்ஜ் க்ளூனி, ப்ரூஸ் வில்லிஸ் போன்றோருடன் பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றும் முதல் இந்திய திரைப்படம் இது தான்.
 
முதலில் இப்படத்தில் பணியாற்ற படக்குழு LEE WHITTAKER-ரிடம் கேட்ட போது, முடியாது என்று தவிர்த்து விட்டாராம். பின்னர் கமல் நடித்த படங்களில் இருந்து சண்டைகாட்சிகளை போட்டு காண்பித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் கமலின் ஈடுபாட்டை பார்த்ததும் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
கமல் மற்றும் ராகுல் போஸ் இருவரும் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை வடிவமைத்து வருகிறார் LEE WHITTAKER. கமல் ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் எல்லாம் டூப் இல்லாமல் தானாகவே நடித்து கொண்டு இருக்கிறார். கமலுக்கு சினிமாவின் மீதுள்ள ஈடுபாட்டைக் கண்டு அசந்து போனாராம் லீ.
 
சண்டைக்காட்சியில் கமலின் விஸ்வரூபத்தை பார்த்து மெய் சிலிர்த்து நிற்கிறதாம் படக்குழு.



Tuesday 6 March 2012

திடீரென ஆன்மீகத்துக்கு மாறிய சுருதி

,
 


கமல் மகளும், நடிகையுமான ஸ்ருதி நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். நெய்வேத்தியம் செய்தும் வழிபட்டார். கோவிலுக்குள் ஸ்ருதியை பார்த்ததும் ரசிகர்கள் முண்டியடித்தனர். கைகளை அசைத்து கூச்சலும் எழுப்பினார்கள். ஸ்ருதி அவர்களிடம் அமைதியாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். சாமி கும்பிடும் இடத்தில் ஆரவாரம் செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
வழிபாடு முடிந்து வெளியே வந்து காரில் ஏறச் சென்ற போதும் ரசிகர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் கோவிலில் அமைதியை கடைபிடிக்கும்படி கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் திருச்சானூரில் உள்ள பத்மாவதி சன்னதிக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்கிருந்து
காளகஸ்தி வந்து இறங்கிய ஸ்ருதியை கண்டதும் ரசிகர்கள் சுற்றி முற்றுகையிட்டார்கள். பக்தர்களும் முண்டியடித்து பார்த்தார்கள். அவர்களிடம் அமைதியாக இருக்கும் படி சைகையால் கேட்டுக் கொண்டு கோவிலுக்குள் சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து சாமியை வழிபட்டார். வழிபாடு முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Monday 5 March 2012

முகத்தை மூடியபடி கமலுடன் மும்பையில் சுற்றிய கண்மணி (Photo in)

,

கண்மணி அன்போடு..காதலன் நான் கமல்ஹாசன் எழுதும் கடிதம்… லெட்டர் …சரி மடல்ன்னே வச்சிக்கயேன் …என்று ஒரு நடிகையுடன், அதுவும் அவரை முக்காடு போட்டுக்கொள்ளச்சொல்லி, கமல் மும்பை வீதிகளை வலம் வந்தது தான் இப்போது அங்கே ஹாட்டஸ்ட் செய்தி.

தனக்கு வயது அறுபதை நெருங்கிய வேளையில், இனிமேல் காதல் கிசுகிசுக்களில் அடிபடக்கூடாது. அப்படி மீறி அடிபட்டால் அது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று முடிவு செய்திருந்த கமல், சில காலமாகவே கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

ஆனால் சமீபத்தில் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பில் நெருங்கிப்பழக ஆரம்பித்த பிறகு அவரால், அப்படத்தின் இன்னொரு நாயகியான பூஜாகுமாரின் நெருக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

யெஸ் உங்கள் யூகம் சரிதான். மும்பையில் கமலுடன் முக்காடு போட்டுக்கொண்டு திரிந்தது சாட்சாத் இந்த பூஜா குமார் தான். நீங்கள் ரெகுலர் சினிமா ரசிகராக இருந்தால் இந்த பூஜா என்கிற இந்த பழைய கூஜாவை, ராஜாவின் சூப்பர் ஹிட் மெலைடிகளுல் ஒன்றான 'காதல் ரோஜாவே' என்ற பாடலை ஹம் செய்த படியே இவரை ஹண்டுபிடித்துவிட முடியும்.

இந்தக்காதல் ஜோடி, முதலில் மும்பை புகைப்படக்காரர் ஒருவர் கண்ணில் பட, அவர் கூட இருந்தது யார் என்று தெரியாததால்,கமலுடன் ரகஸியமாக அலையும் ஒரு பெண் என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டுவிட்டார். உடனே அவர்கள் இருவருக்குள் மட்டுமே எரிந்துகொண்டிருந்த தீ மும்பை முழுக்க பற்றிக்கொண்டது.

'இது என்னடா வம்பாப்போச்சி' என்று நொந்த கமல் உடனே தனது பி.ஆர்.ஓ. திகில் முருகனை அழைத்து, 'அது ஒரு பெண் என்று மட்டும் வரும்போது செய்தி மிக ஆபாசமானதாக காட்சி அளிக்கிறது. எனவே என் கூட சுற்றியது 'விஸ்வரூபம்' நாயகி பூஜாகுமார் தான் என்றும் நாங்கள் இருவரும் ஒரு ஃபோட்டோ ஷூட் சம்பந்தமாக மும்பை வந்தோம் என்றும் தெரிவித்து விடுங்கள் என்றாராம்.

சொல்லவே இல்ல…முந்தியெல்லாம் இப்பிடி சுத்துறதுக்குப் பேரு 'டிஸ்கஷன்'னு வச்சிருந்தாங்க. இப்ப ஃபோட்டோ ஷூட்டுன்னு மாத்தீட்டாங்களோ ? நல்லா ஷூட் பண்ணுங்க கமல் சார்.

Sunday 4 March 2012

கேன்ஸ் பட விழாவில் ‘விஸ்வரூபம்’

,


'விஸ்வரூபம்' படத்தை கேன்ஸ் பட விழாவுக்கு அனுப்பும் விருப்பத்தில் இருக்கிறார் கமல். படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஓரிரு வாரத்தில் படத்தை முடித்துவிட்டு படவிழாவுக்கு அனுப்பும் வேலையை துவங்கவிருக்கிறார். கேன்ஸ் படவிழா போட்டி பிரிவில் இந்த படத்தை சேர்த்துவிடும் முடிவில் உள்ளார் கமல்.

விஷ்வரூபத்தில் இஷா செர்வானியும் இல்லை

,


கமலின் விஸ்வரூபம் படத்திலிருந்து நடிகை இஷா ஷெர்வானியும் விலகிவிட்டார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், இப்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.

கமல் இயக்கும் இந்தப் படத்தின் கதாநாயகிகள் விஷயத்தில் மட்டும் இழுபறியான நிலையே இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவை தேர்வு செய்தனர். கமலின் மனைவி கேரக்டரில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சோனாக்ஷி திடீரென விலகி விட்டார்.

அவருக்கு பதில் தீபிகா படுகோனே, சோனம்கபூர், வித்யாபாலன், சமீராரெட்டி, அனுஷ்கா என பலரை பரிசீலித்து இறுதியாக பூஜாகுமார் தேர்வானார். இந்த நிமிடம் வரை அவர்தான் ஹீரோயின்.

இரண்டாவது நாயகியாக இஷா ஷெர்வானி நடிக்கவிருந்தார். இந்த நிலையில் இஷா ஷெர்வானி திடீரென படத்தில் இருந்து விலகி விட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "விஸ்வரூபம்" படத்தில் கமலுடன் நடிக்க அவர் அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினர். கமலுடன் நடிக்க போவதை நினைத்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் அப்படத்தில் நடிக்க தேதி ஒத்து வரவில்லை. எனவே அதில் இருந்து விலகி விட்டேன்," என்றார்.

Friday 2 March 2012

கமலுக்கு நோ சூர்யாவுக்கு ஒகே சொன்ன நடிகை

,

நடிகை இஷா ஷர்வானி இந்தியில் நடித்த படங்கள் சுமாராக ஓடின. அவரிடம் உள்ள ஏதோவொரு திறமையை பார்த்த கமல் தான் தயாரித்து இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் படமான விஸ்வரூபத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்.

இஷா ஷர்வானிக்கு கமல் கேட்ட கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால் விஸ்வரூபம் வாய்ப்பு கைநழுவி போய்விட்டது. இதை பற்றி கேட்ட போது இஷா " கமலின் விஸ்வரூபம் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு கால்ஷீட் தான் காரணம்.
இந்த வாய்ப்பு நழுவியது வருத்தமாக இருந்தாலும், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
இஷா விகரம் நடிக்கும் பாலிவுட் படமான டேவிட்டிலும் நடிப்பதாக பேச்சு. கமலின் விஸ்வரூபம் மார்ச் 15-ம் தேதி ரிலீஸாகிறது.

Thursday 1 March 2012

’கமலின் விஸ்வரூபத்தை மிஸ் பண்ணினேன்’- இஷா ஷெர்வானி

,
 

மும்பையிலிருந்து கோடம்பாக்கத்தை நோக்கி மையம் கொள்ளக்கிளம்பும் புதிய புயலின் பெயர் இஷா ஷெர்வானி.நாட்டியத்தின் சகல அயிட்டங்களிலும் சக்கரவர்த்தினியான இஷா, கே.வி.ஆனந்த்-சூர்யா காம்பினேசனில் உருவாகும் 'மாற்றானில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.இப்படி ஒரு பாடலுக்கு ஆட இஷாவை ஒப்புக்கொள்ள வைக்க கே.வி.ஆனந்த் மும்பையில் மூன்று தினங்கள் முகாமிட்டிருந்தது தனிக்கதை.

அடுத்து பிஜாய் நம்பியார் இயக்கத்தில் மூன்று ஹீரோ சப்ஜெக்டான 'டேவிட்' இந்திப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் இஷா, படங்களில் நடிப்பதை விட, தனது புதுப்புது நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதில் தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்.

இதுபோன்று ஒரு நாட்டிய நாடகத்துக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதுதான், இஷாவை, கமல் தனது 'விஸ்வரூபம்' படத்துக்கு நாயகியாக நடிக்க அழைத்தாராம். ஆனால் நாட்டிய நிகழ்ச்சியை ஒரு பட வாய்ப்புக்காக எப்போதுமே தள்ளிப்போட விரும்பாத இஷா, கமல் படம் என்றும் பாராமல், 'ஸாரி அடுத்த படத்துல பார்க்கலாம்' என்று கமலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டாராம்.

Isha Sharvani opts out of Kamal's Viswaroopam

,
 

Isha Sharvani who was roped in to play a important role in Kamal Hasaan's magnum opus has opted out of the movie citing issues with her availability.The actress regrets opting out of her dream debut with Kamal Hasaan. It is said that the pretty actress was trying her level best to accomodate her dates with Kamal Hasaan'sViswaroopam , Surya's Maatran and Vikram's Bollywood venture David.But since the makers of the Viswaroopam were on a urge to complete the movie for the Cannes Festival the actress had no other go but to opt out of the movie.Kamal is now looking out for a suitable replacement for her role.It is worth mentioning here that the team had approached Katrina Kaif and Deepika Padukone for the role.

கேன்ஸ் விழாவின் நேரடிப் போட்டிக்குப் கமலின் விஸ்வரூபம்!

,
 
 
 
பொதுவாக கமல் படங்கள் குறித்து எக்கச்சக்க செய்திகள் வரும். ஆனால் விஸ்வரூபம் அதில் விதிவிலக்கு.
 
கூடுமானவரை இந்தப் படம் குறித்த தகவல்களில் ரகசியம் காத்து வருகிறார் கலைஞானி.
 
அப்படி தப்பித்தவறி கசிந்துள்ள ஒரு விஷயம்... இந்தப் படத்தை நேரடியாக கேன்ஸ் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கு அனுப்புகிறார் என்பது.
 
படத்தின் க்ளைமாக்ஸ் வரை வந்துவிட்ட கமல், அடுத்த ஒருமாதத்துக்குள் படத்தை முடித்து கேன்ஸ் விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்.
 
இதுகுறித்து கமல் கூறுகையில், "இந்தப் படத்தை கேன்ஸுக்கு அனுப்புவதும் என் நோக்கம்தான். ஆனால் இப்போதே அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்பவில்லை. குறித்த காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் என் முன் உள்ள சவால்.
 
கேன்ஸ் பட விழா ஏற்பாட்டாளர் கிறிஸ்டியன் ஜீனுடன் தொடர்பில் இருக்கிறேன். மார்ச் 15-க்குள் படம் தொடர்பான பணிகள் முடிந்துவிடும் என நம்புகிறேன்.
 
போட்டிப் பிரிவிலேயே விஸ்வரூபத்தைச் சேர்க்கும் முயற்சியில் உள்ளேன். அதற்கேற்ப கேன்ஸ் விழாக் குழுவினர் ஓரிரு நாட்கள் தேதிகளை மாற்றிக் கொள்வதாகக் கூறியுள்ளனர்," என்றார்.
 
இது மட்டும் நடந்துவிட்டால், கேன்ஸில் சர்வதேச போட்டிப் பிரிவில் நேரடியாகப் பங்கேற்கும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கிடைக்கும். கமலுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் கிரீடத்தில் இன்னும் ஒரு சிறகாக அது அமைந்துவிடும்!



புதுமுகங்களை வாழ்த்திய ரஜினி கமல்

,


நாங்க என்ற படத்தின் மூலம் 10 பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமல்ஹாஸனும்.

பிரபல பாடகர் மனோ, இயக்குநர் சந்தானபாரதி உள்பட 10 பிரபலங்களின் வாரிசுகளை தனது நாங்க படத்தில் அறிமுகப்படுத்துகிறார் செல்வா.

படத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனைபேருமே சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாஸனை சந்தித்து வாழ்த்துப் பெற விரும்பினார்கள்.

ரஜினியைச் சந்திக்க மனோ ஏற்பாடு செய்திருந்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, அனைவரையும் சந்தோஷத்துடன் வரவேற்ற ரஜினி, இயக்குநர் செல்வாவிடம் படத்தின் கதையைக் கேட்டுள்ளார். குறிப்பாக எண்பதுகளின் பின்னணியில் நடக்கும் கதை என்பதைக் கேட்டு, "நல்ல விஷயம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு தெரியுது… நல்லா வரும். வாழ்த்துக்கள்," என்று ஆசீர்வதித்துள்ளார்.

கமல்ஹாஸனைச் சந்திக்க இயக்குநர் சந்தான பாரதி ஏற்பாடு செய்திருந்தார். புதியவர்களுக்கு வாழ்த்துச் சொன்ன கமல், புதியவர்கள் குறிப்பாக வாரிசுகள் வருவது நல்லதுதான், என்றாராம்.

Viswaroopam competing at Cannes Film Festival

,
 

A Mumbai tabloid has reported that Kamal Haasan is getting his magnum opus Viswaroopam ready for competing at the prestigious Cannes Film Festival opening mid May.

The tabloid quotes Kamal saying, "At the moment, I can`t discuss my plans for Cannes because we`re really trying hard to complete the film on time. But yes, the Cannes film festival is keen on having Viswaroopam. I am in constant touch with Christian Jeune from the Festival. She`s keeping a track of our progress."

Kamal says he is trying his best to complete Viswaroopam which he is directing by March 15. The Cannes Film Festival seems to have altered its rule and has extended the deadline to accommodate Viswaroopam in its competitive section.

Vishwaroopam written and directed by Kamal features Pooja Kumar, Rahul Bose, Andrea Jeremiah, Samrat Chakrabarti, Jaideep Ahlawat, Zarina Waheb and others. It has music by Shankar- Ehsaan-Loy and is produced by PVP Cinemas.

If Viswaroopam makes it to the competitive section at the world`s premier film festival in Cannes, it will be another feather on Kamal`s hat



Wednesday 29 February 2012

Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team

,
 

Director Selva's 25th film Naanga gets appreciation from Kamal Hassan and Superstar Rajinikanth.

Naanga film which has 13 new faces which also includes sons of film personalities like singer Mano, Santhana Bharathi.

Naanga narrates 5 different love stories and the film is set in 1980′s and travels through 2011.

Kamal hassan and Rajinikanth has appreciated the team's initiaves and has wished for the success of the film.

The crew who are happy on meeting the two superstars of Tamil cinema, are planning to promote their film through a road show that starts on the 2nd of March and goes on till the 9th and are planning to travel to Chennai, Coimbatore, Madurai & Salem.

Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team



View article...

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates