Sunday 1 April 2012

ரஜினி ரசிகர்கள் , கமல் ரசிகர்கள்- யார் புத்திசாலிகள்?

,
 
 
 
அட போங்கப்பா, ரசிகர்களாக இருப்பதே ஒரு முட்டாள்தனம், அதுல அந்த ரஜினி,கமல்-னு பெரிய வித்தியாசம் வேற அப்படினு நீங்க கடுப்பாகக்கூடும்.
 
உண்மையில் நம் மனதை உள்நோக்கி பார்த்தால் நாம் சந்தித்த மனிதர்களின், நம்மை ஈர்த்த மனிதர்களின் தாக்கம், ஆழ்மனதில் இருக்கக்கூடும். அதன் பாதிப்பாக நம் நடவடிக்கைகளில் ஒரு சில மேனரிஸங்களும் நம்மை அறியாமல் வெளிப்படக்கூடும். ஆழ்ந்து கவனித்தால் அது யாரோ ஒருவரிடமிருந்து நாம் ரசித்த விஷயமாக இருக்கும்.
 
புராணக்கதை கேட்ட காலங்களில் அதன் கதை மாந்தர்களை ரசித்தவர்கள் இப்போது சினிமா கதாநாயன்-களுள் மூழ்கி இருப்பதனை காலக்கொடுமை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமே தவிர யதார்த்தம் இதுதான்.
 
முன்பு புத்தக வாசிப்பு அதிகம் இருந்த காலத்தில், தன்னை வந்தியதேவனாகவும், அரவிந்தனாவும் வரிந்து கொண்டவர்கள், சினிமாவின் தாக்கம் அதிகரித்த பின் தன்னை சிவாஜியாகவும், எம்.ஜி.ஆராகவும் பாவித்துக்கொண்டார்கள்.இன்று ரஜினி, கமல் என்னும் பிம்பங்களை தாண்டி, அடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறார்கள்.
 
நான் யாருடைய ரசிகனும் இல்லை என்று காட்டிக்கொள்பவர்களின் மனதிலும் தான் ரசித்த யாரோ ஒருவரின் பிம்பம் ஒளிந்திருக்கும் என்பது தான் உண்மை.

தமிழ் சினிமாவில் எப்போதும் ஈர்ப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் தாக்கமும், நடிப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் ஏற்றமும் இருக்கும்.
 
எம்.ஜி.ஆர். ஈர்ப்பு வகை. சிவாஜி நடிப்பு வகை.
 
ரஜினியை பொறுத்தவரை ஈர்ப்பு அடிப்படையிலான ரசிகர்கள் தான் ஏராளம். அடித்தட்டு மக்கள், குழந்தைகள், பெண்கள் என்ற வகையில் ரஜினியின் கவர்ச்சி எடுபட்டிருப்பதை பார்க்கலாம். இப்போது இணையத்தில் அதிக அளவில் ரஜினி ரசிகர்கள் குவிந்திருப்பதற்கான காரணமும், முன்பு சிறுவர்களாக இருந்தவர்களை ரஜினி கவர்ந்தது தான்.
 
கமலை பொறுத்தவரை நடிப்பு மூலம் ரசிகர்களை ஈர்த்தது தான் அதிகம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் கமல் ரசிகர் என்ற அடையாளத்தையே கொண்டிருக்கிறார்கள்.
 
சினிமா சார்ந்த அத்தனை தொழில்நுட்ப விஷயங்களையும் கமல் தெரிந்து வைத்திருப்பது கூட இதற்கு காரணமாக இருக்கிறது. அனந்து முதல் வையாபுரி வரை அத்துணை சினிமா மனிதர்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்வதுடன், அவர்களையும் தன்னுடைய படங்களில் பயன்படுத்துவது கமலினை (மேல்தட்டு) ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.
 
சில பல காரணங்களால் சிவப்பாக இருக்கும் கமலை விட, ரஜினிக்கு அதிகமான பெண்களின் ஈர்ப்பை பெற்றியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம், கேமராவை பார்த்து பஞ்ச் பேசுவது இதெல்லாம் ரஜினிக்கே கைவந்த ரசிகர்களை ஈர்ப்பதற்க்கான வித்தை.
 
படம் வெளியாகும் சமயத்தில் எல்லாம் அரசியல் வருவதாக பேசுவது கூட,ரசிகர்களை தக்கவைக்க ரஜினி மேற்கொள்ளும் "சினிமா அரசியல்" தந்திரம் தான் என்பது இன்றும் உயிருடன் இருக்கும் குற்றச்சாட்டுதான்.
 
ஆனால் ரஜினி அளவு ரசிகர்களின் ஈர்ப்பை இனி ஒரு நடிகர் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே.இப்போது கூட ரஜினியின் ரோபோ படவியாபாரம் பார்த்து திகைத்து போய் கிடக்கிறது இந்திய திரையுலகம்.
 
ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் இயங்குபவர்கள் கூட, தங்களின் சொந்த பணத்தை போட்டுதான் கோலாகலம் செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
ரஜினி, கமல் தலைமுறையை தாண்டி வரும்போது, இனி வரும் காலங்களில் இந்த கூத்துக்களும் ஒரு முடிவினை அடையும் என்று நம்பலாம்.
 
இனி ரசிகர் மன்றங்கள் தீண்டதகாததாக மாறிவிடும் சூழ்நிலையும் விரைவில் வரும், அதற்கு ஈடாக இணைய ரசிகர் மன்றங்கள் உருவாகக்கூடும்.
 
ரசிகர் மன்றம் நடிகர்களுக்கு கூடாரம்;
குடும்பங்களுக்கு சேதாரம்.
டிஸ்கி:
இது ஒரு மீள்பதிவு.

டிரைலர் டைம்ஸ்:

எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கிய ஈர்ப்பியல் விதிகள் - விரைவில்...
 
 

அமீர் இயக்கத்தில் கமலஹாஸன்!

,
 
 
 
நடிகர் கமலஹாஸனை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன் எனக் கூறியிருக்கிறாராம் அமீர். தற்போது விஸ்வரூபம் படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் கமலஹாஸன் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருப்பதால் அடுத்ததாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக இருக்கிறார்.
 
 
இந்நிலையில் கமலஹாஸனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன் என்று அமீர் கூறியிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
அமீர் தற்போது ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ஆதிபகவன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படத்தில் சல்மான் கான், ஜாக்கி சான் ஆகியோர் நடிக்கிறார்கள் என வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லையாம்.
அப்டீன்னா அது பேரு புரளி தானே?

 


Monday 26 March 2012

Sridevi Kamal Hassan Sensational Hot Scene

,
 
 


Kamal left Sridevi waiting
Kamal met her sometime later
She said, I see your eyes are dead
What happened to you, lover?

What happened to you?
And since she spoke the truth to me
I tried to answer truthfully

Whatever happened to my eyes
Happened to your beauty
Happened to your beauty
What happened to your beauty
Happened to me


Gsv Pics |Gsv Vids | Techno zip| Divine Thought | For The Sake of Us | Gsv Films


Saturday 24 March 2012

Priyamani denies Kamaal movie

,
 

Priyamani was not seen in Kollywood for a year now, the actress is busy with movies with Tollywood . Priyamani was recently offered a role in Kamaal R Khan's Deshadrohi 2 . In a micro blogging Kamaal R Khan had offered Priyamani the role of Abu Salim's girl friend character Monica Bedi . But when we contacted the actress , she said that she has not seen the tweet from the Bollywood director but she clarified that she will not be a part of the movie since she has prior commitments to be taken care of now .The actress had done Bollywood movies like Ravaan and Raktha Charithira both the movies were made by ace directors Mani Ratnam and Ram Gopal Varma.

400கோடி பட்ஜெட்! ஜாக்கிசானுடன் கமலா? சூர்யாவா?

,

பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர் போனவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். கமல் நடித்த தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே தன்னைப் பற்றி நிரூபித்தவர் ரவிச்சந்திரன். ஜாக்கி சான் நடித்த பெரும்பாலான படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டதன் மூலம் ஜாக்கியின் நண்பரானவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இந்த நல்ல நட்பின் மூலமே தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கி சான் வந்தார்.

தற்போது ரவிச்சந்திரன் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்ப்து ஜாக்கி சான் நடித்த 'ஆர்மர் ஆப் காட் -ll' படத்தை தமிழில் எடுக்கும் முயற்சியில் தான். இந்த படத்தில் ஆர்மர் ஆப் காட் படத்தின் கதை இந்தியாவில் நடப்பது போல் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜாக்கிசான் ரசிகர்களோடு சேர்த்து மற்றவர்களையும் கவர்வதற்காக இந்தி மற்றும் தமிழ் ஹீரோக்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இந்தியில் சல்மான்கானிடம் பேசப்பட்டு வருகிறது. ஜாக்கிசானுடன் இணைந்து நடிப்பதால் பெரும்பாலும் சல்மான்கான் ஒப்புக்கொள்வார் என்றே சொல்கிறார்கள்.

தமிழ் ஹீரோக்களில் ரவிசந்திரனுக்கு கமலுடன் நல்ல நட்பு இருப்பதாலும், இந்த வருடம் ரவிச்சந்திரனுக்கு கமல் கால்ஷீட் கொடுப்பதாக கூறியிருப்பதாலும் கமல் தான் நடிப்பார் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்கார் தரப்பிலிருந்து சூர்யாவிடம் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சு நடப்பதாகவும் தெரிகிறது. படத்தின் பட்ஜெட் 400கோடி ரூபாய் தானாம்.

Thursday 22 March 2012

Kamal Hasaan ,Salman Khan ,Jackie Chan roped in for Aascar Films ?

,

Aascar Film productions which is known for mega budget ventures is yet again back with a magnum opus that is touted to be a sequel of Hollywood blockbuster Armour of God which had Jackie Chan in the lead. Aascar Films have approached Bollywood Super Star Salman Khan to play a major role in the movie , but the star is yet to decide . There are speculations that the movie will also feature few biggies from Kollywood industry the movie might feature Kamal or Rajini . However , insiders claim that Kamal Hasaan is the front runner for the role . it may be recalled that Kamal Hasaan shares great rapport with Jackie Chan ever since he flew down for Kamal Hasaan starrer Dasavatharam .

Wednesday 14 March 2012

ஆக்ரோஷ கமல் - ஆச்சர்யப்பட்ட லீ!

,
 
 
 
இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்க, கமல் இயக்கி வருகிறார். ஷங்கர்-இஷான்-லாய் இசையமைத்து வருகிறார்கள்.
 
'விஸ்வரூபம்' ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. இதுவரை கமல் நடித்த படங்கள் எல்லாவற்றையும் விட அதிக பொருட்செலவில் தயாராகும் படம் 'விஸ்வரூபம்'.
 
'விஸ்வரூபம்' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் LEE WHITTAKER. இவர் மைக்கேல் பே இயக்கிய 'PEARL HARBOUR' படத்திற்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தவர். அர்னால்ட், ஜார்ஜ் க்ளூனி, ப்ரூஸ் வில்லிஸ் போன்றோருடன் பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றும் முதல் இந்திய திரைப்படம் இது தான்.
 
முதலில் இப்படத்தில் பணியாற்ற படக்குழு LEE WHITTAKER-ரிடம் கேட்ட போது, முடியாது என்று தவிர்த்து விட்டாராம். பின்னர் கமல் நடித்த படங்களில் இருந்து சண்டைகாட்சிகளை போட்டு காண்பித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் கமலின் ஈடுபாட்டை பார்த்ததும் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
கமல் மற்றும் ராகுல் போஸ் இருவரும் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை வடிவமைத்து வருகிறார் LEE WHITTAKER. கமல் ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் எல்லாம் டூப் இல்லாமல் தானாகவே நடித்து கொண்டு இருக்கிறார். கமலுக்கு சினிமாவின் மீதுள்ள ஈடுபாட்டைக் கண்டு அசந்து போனாராம் லீ.
 
சண்டைக்காட்சியில் கமலின் விஸ்வரூபத்தை பார்த்து மெய் சிலிர்த்து நிற்கிறதாம் படக்குழு.



My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates